வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மீன் ஆணம் சோத்தை சாப்பிடாத அதிரையர்கள் உண்டா ? என கேட்குமளவுக்கு மீனின் மீது பிரியம் கொண்டிருப்பார்கள். சும்மான்னாலும் தினமும் மீன் மார்கெட்டுக்கு சென்று வருவோர்களும் உண்டு. வித வித பெயரைக் கொண்ட ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு ருசியைக் கொண்டது. இதனாலே எனக்கு மீன் மார்க்கெட் சென்று மீன் வாங்கி வருவது பிரியம் என்றாலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளேன்.
இன்று காலை மீன் மார்கெட்டுக்கு சென்ற எனக்கு மீன் வரத்து சற்று அதிகமாக இருந்தததைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் எல்லா வகை மீன்களும் மார்க்கெட்டில் ஆங்காங்கே கொட்டி குமித்து வைத்து இருந்தனர்.
ஆஹா இன்னிக்கி விலை சல்லிசா கிடைக்கும் பாருங்கன்னு...
அருகில் நின்ற ஜபருல்லாக்காகிட்டே சொன்னேன். நீ ஒரு ஆளுப்பா, பாடு குறைவா இருந்தாலும் சரி...இல்லே கூடுதலா இருந்தாலும் சரி.... ‘விலையை மட்டும் குறைக்க மாட்டானுங்க இவனுகன்னு என் காதில் முணுமுணுக்க...
சரி நமக்கு பிடிச்ச மீன்களை தேர்வு செய்து என்னப்பா விலை ? ன்னு கேட்டா ஜபருல்லாக்கா கூறியது போல நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது வியாபாரி கூறிய விலை !
விலை உயரக் காரணமென்ன ?
தன் உயிரை பணயம் வைத்து இராப் பகலா கடலின் ஆழத்திற்கு சென்று மீன்களை பிடித்து கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் வரை கஷ்டமாக இருந்தாலும், இந்த மீன்கள் இரண்டு மூன்று கைகள் மாறி சந்தைக்கு விற்பனைக்கு வருவதை இறுதியில் அதிக விலை கொடுத்து சுவைப்பது நாமாகவே உள்ளோம்.
மீன் வியாபாரிகளில் சிலரது அன்றாட வாழ்வாதாரங்கள் மிகவும் ஏழ்மையுடன் அவர்களின் பொழுதுகள் பெரும் சிரமத்துடனே ஒவ்வொரு நாளும் கழிகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுடையே தீய பழக்கங்களாகிய ‘மது', ‘வட்டி’ ஆகியவற்றை நிறுத்திவிட்டால் அதிகரித்துவிட்ட மீன் விலையை மட்டுமல்ல அவர்களின் ஏழ்மை நிலையையும் தவிர்க்கலாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.
சேக்கனா நிஜாம்

True but people's not change life. Interest and drink this market people. Doing afternoon time
ReplyDeleteவட்டி கொடுமையினால் விலை உயர்வு என்று ஆராய்ந்து பார்க்கும்பொழுது
ReplyDeleteஅடிதளமக்கள் அன்றாட தேவைப்படும் அத்தியாவசிய தேவைகளில் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதனை நம்மால் உணரமுடிகிறது வேண்டாம் வட்டி!