.

Pages

Saturday, January 31, 2015

ஏன் ஹிஜாப் ? - பரிசு போட்டி அறிவிப்பு - கால நீட்டிப்பு...

பிப்ரவரி 1-   உலக ஹிஜாப் தினத்தை முன்னிட்டு வலையுக அன்பர்களுக்காக இஸ்லாமிய பெண்மணி நடத்தும் இந்த வருடத்தின் முதல் போட்டியை இங்கு அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்... !!

உங்கள் அறிவுக்கும் ஹிஜாப்பிற்கும் சம்மந்தமே இல்லையே என்று நிருபர் கேட்ட கேள்விக்கு நோபல் பரிசு வென்ற இஸ்லாமிய பெண்மணியின் பதிலுக்கும் நம் போட்டிக்கும் தொடர்புண்டு என்றால் மிகையாகாது.

உடலை மறைத்திருக்கும் பெண்கள் அறிவையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்ற பிம்பம்  இன்று பலர் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. ஹிஜாப் பேணும் சகோதரிகள் ஒவ்வொருவரும் ஹிஜாப் குறித்தான கேள்விகளை கட்டாயம் எதிர்கொண்டிருப்பார்கள். அவர்களின் அனுபவங்களை பகிரவும், தங்கள் வீட்டு பெண்கள் எதிர்கொண்ட  கேள்விகளுக்கு ஆண்களின் பதில்களை பகிரவும் ஓர் அறிய வாய்ப்பு.

போட்டிக்கான  கேள்விகள் மற்றும் பரிசுகள் விபரம் கீழ்க்காணும் படத்தில்:-

போட்டியின் விதி முறைகள்:-
உங்கள் பதில்கள் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்..
நீங்கள்  எழுதும் படைப்பு இதற்கு முன் வேறு எந்த தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருக்கக்கூடாது. காப்பி பேஸ்ட்டாகவோ யாரோ வேறொருவரின் பதில்களாகவோ இருக்கக்கூடாது. கட்டாயம் உங்கள் சொந்த பதிலை மட்டுமே எழுதி அனுப்புங்கள்.

உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி: admin@islamiyapenmani.com

உங்கள் ஆக்கங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள்:          
பிப்ரவரி 15-02-2015 இந்திய நேரம் இரவு 11.59க்குள்
ஜனவரி 31-2015 என்ற போட்டியின் இறுதி தேதி வலையுக நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி 15-2015 வரை போட்டியின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் விருப்பமே எங்கள் விருப்பம்.
நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

அனைவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பரிசினை வெல்லுங்கள்.

கவனிக்க: ஹிஜாப் என்பது நாகரீகமாய், ஒழுக்கமாய், இறுக்கமற்றதாக, முகம், கை மணிகட்டு, கால்பாதம் தவிர்த்து உடல் அங்கங்களை  வெளிகாட்டாத எந்த உடையையும் குறிக்கும்.

வலையுக சகோதர சகோதரிகளுக்கு அன்பான வேண்டுகோள்: 
தங்கள் வலைதளங்களில் போட்டி குறித்த பேனரை பதிவு செய்து இந்த போட்டி அனைவரிடத்திலும் சென்றடைய உதவுங்கள்...

நன்றி: இஸ்லாமிய பெண்மணி
பரிந்துரை: 'நட்புடன்' ஜமால்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.