.

Pages

Wednesday, January 28, 2015

புதிய தலைமுறை 'கற்க கசடற' நேரலை நிகழ்ச்சியில் அதிரை மீரா!

இன்று (28.01.2015) மாலை இந்திய நேரப்படி மாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள 'கற்க கசடற' என்ற நிகழ்ச்சியில் 'அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? (HOW TO SCORE MORE MARKS/) என்ற பொருளின் கீழ் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்கள் அதிரை மேலத்தெருவை சேர்ந்தவரும், சென்னை திருவல்லிக்கேணியில் செயல்படும் முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியருமான 'மீரா' என்கிற F.சாகுல் ஹமீது அவர்கள்.

இந்த நிகழ்ச்சி நாளை (29.01.2015) வியாழன் அன்று அதிகாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை மறுஒளிபரப்பு செய்யப்படும்.

'நல்லாசிரியர்' விருதை சென்ற மாதம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழாவில் KSR GROUP OF INSTITUTION மற்றும் TIMES OF INDIA இணைந்து வழங்கிய விழாவில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் (INSA) தலைவர் டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்களாலும், சென்னை மயிலாப்பூரில் இயங்கும் SRINIVASA YOUNGMEN ASSOCIATION என்ற அமைப்பினராலும் 'SYMA' என்ற விருதை மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் மூலமும் பெற்று தனது கல்விப்பணிக்காக சிறப்படைந்துள்ளார்கள்.

ஒரு முஸ்லீமாக மார்க்கத்தை பின்பற்றியும், தோற்றத்தில் வெளிப்படுத்தும் நிலையிலும் பல சிறப்புக்களை பெற முடியும் என சக முஸ்லீம்களுக்கும் நல் உதாரணமாக திகழும் 'நல்லாசிரியர்' மீரா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் மென்மேலும் சிறப்புற ஏகன் அல்லாஹ் துணை நிற்பானாக!

K.M.N. முஹம்மது மாலிக்
தலைவர் / TIYA - அமீரகம்

6 comments:

  1. மாஷா அல்லாஹ்..
    அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக
    மப்ரூக் மீரா காக்கா . . .

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்..
    அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக
    மப்ரூக் மீரா காக்கா . . .

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்..
    அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக

    ReplyDelete
  4. இறைவன் உதவியால் இன்னும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துக்கள் சகோதரரே !

    ReplyDelete

  5. மாஷா அல்லாஹ்..
    அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக

    ReplyDelete
  6. கற்க கசடற நிகழ்ச்யில் உங்கள் கல்வி குறிப்பை ஏற்று கற்பவை கற்றபின் அதற்க்கு உரிய நன்மை அல்லாஹ் விடம் நிற்க அதற்கு தக.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.