.

Pages

Tuesday, January 27, 2015

பட்டுக்கோட்டை முஸ்லிம் தெரு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா!

பட்டுக்கோட்டை முஸ்லிம்தெரு நகராட்சிப் பள்ளி குடியரசு தின விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

 தலைமை ஆசிரியர் மகாலிங்கம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று பேச, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமானுல்லா விழாவிற்கு தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், மெகருன்னிஷா பேகம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மான், மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் சிறப்பம்சமாக மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆசிரியைகள், உமாராணி, செல்வராணி, சுஜாதா,கஸ்தூரி, மீனாட்சி சுந்தரி ஆகியோர் சிறப்பாக அமைத்துக் கொடுத்தனர்.

விழாவில், முன்னாள் தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், மனிதநேயம் மன்றம் செயலர் முத்துக்குமார், மேலாண்மைக் குழு தலைவை ஷார்மிளாபேகம், மற்றும் பெற்றோர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்துகொண்ட்னர்.

கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

இறுதியில் பட்டதாரி ஆசிரியை வைரமணி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.