.

Pages

Thursday, January 22, 2015

தன்னார்வ தொண்டர்கள் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்: வட்டார மருத்துவ அலுவலர் வேண்டுகோள் !

தன்னார்வ தொண்டர்கள் இரத்ததானம் செய்ய வட்டார மருத்துவ அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கு,அறிவழகன் இரத்ததானம் பற்றி கூறும்போது...
பாதுகாப்பான இரத்தத்தின் தேவைநாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது,  இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதில் தன்னார்வ இரத்தகொடையாளர்களின் பங்குமகத்தானது, விபத்துகளின் போது இரத்த இழப்பை ஈடு செய்ய தேவைப்படுகிறது,

பெரியஅறுவைசிகிச்சைமேற்கொள்ளும் போது கூடுதலாக இரத்தம் தேவைப்படுகிறது,  இது தவிர 'தலசீமியா' நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும். தீக்காயம் அடைந்தவர்களுக்கும். இரத்த சோகை அதிகம் உள்ளவர்களுக்கும். பிரசவ காலத்தில் ஏற்படும் இரத்த இழப்பிற்கும். இரத்தப் புற்றுநோய் தாக்கியவர்களுக்கும் உயிர்காக்கும் மருந்தாக இரத்தம் தேவைப்படுகிறது,

இரத்ததானம் செய்வதால். மாரடைப்பை குறைக்கிறது, புதிய இரத்தஅணுக்கள் உருவாக ஊக்கப்படுத்துகிறது, இரத்ததானம் வழங்குவதால் ஒருவர் உடலில் 500 கலோரிகளுக்கு மேலாக எரிக்கப்படுகிறது, இரத்ததானம் செய்வதற்குமுன். உடல் எடை கணக்கிடப்படுகிறது,  இரத்தஅழுத்தம் பரிசோதிக்கப்படுகிறது,  ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யப்படுகிறது,  இரத்தவகை மற்றும் ஆர்,எச் பிரிவுப் பரிசோதனை செய்யப்படுகிறது,

இரத்ததானம் செய்தபிறகு. தானமாக பெறப்பட்ட இரத்தம் பல்வேறு நோய்களுக்காக பரிசோதிக்கப்படுகிறது,  எச்,ஐ,வி,. மஞ்சள் காமாலை. பால்வினை மற்றும் மலேரியாபோன்றநோய்கள் இருந்தால். இரத்தம் பயன்படுத்தப்படுவதில்லை,  மேலும் தானம் வழங்கியவருக்கும் இரத்தத்தில் உள்ளநோயின் தன்மை தெரியப்படுத்தப்படுகிறது,

மேலும். 18 வயதுமுதல் 60 வயது வரையுள்ள எல்லாஆண்களும். பெண்களும் இரத்ததானம் செய்யலாம், இரத்ததானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்கவேண்டும்,  நம் ஒவ்வொருவருடைய உடலிலும் சுமாராக 5 லிட்டர் இரத்தம் உள்ளது,  இதில் இரத்த தானத்தின் போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லிலிட்டர் மட்டுமே, ஆனால் அந்த இரத்தமும் 24 மணிநேரத்திற்குள்ளாக நமது உடலால் மீண்டும் ஈடு செய்யப்படுகிறது,  3 மாதங்களுக்கு ஒரு முறை தாராளமாக இரத்ததானம் செய்யலாம், இரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும்,  இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றடாடவேலைகளை மேற்கொள்ளலாம்,

கருவுற்றிருக்கும் போதும். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும் போதும் இரத்ததானம் செய்யவேண்டாம்,  பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்கம். சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட 3 மாதங்களுக்கும் இரத்ததானம் செய்வதை தவிர்க்கவும்,

மலேரியா நோய் சிகிச்சைப் பெற்றபிறகு, மு்ன்று மாதங்களுக்குத் தவிர்க்கவும்,  மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்றபிறகு ஓர் ஆண்டு வரை இரத்ததானம் செய்வதை தவிர்ப்பது நல்லது,  மேலும் பால்வினை - எச்,ஐ,வி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் செய்யக்கூடாது, மாதவிடாய் நேரங்களில் பெண்கள் இரத்ததானம் செய்யவேண்டாம்,  சர்க்கரைநோய் உள்ளவர்கள் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்கலாம்,  ஸ்டீராய்ட். ஹார்மோன் தொடர்பான மருந்துகள் உட்கொள்ளும் போதும். போதை மருந்து உட்கொள்ளுபவர்கள் மற்றும் பல்வேறு ஆண்-பெண் பாலியல் தொடர்பு வைத்திருப்பவர்கள் இரத்ததானம் செய்யக்கூடாது,  பல்வேறு நோய் தடுப்பு ஊசிகள். மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இரத்ததானம் செய்யக்கூடாது, அரசு இரத்த வங்கிகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் இரத்த வங்கிகளில் மட்டுமே இரத்ததானம் செய்யவேண்டும்,  அரசு இரத்த வங்கி நடத்தும் இரத்ததான முகாம்களிலும். இரத்ததானம் முகாம் நடத்தஅனுமதி பெற்ற தனியார் இரத்த வங்கிநடத்தும் முகாம்களிலும் இரத்ததானம் செய்யலாம்,

பட்டுக்கோட்டைவட்டாரப் பகுதிகளில்உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். கல்லூரி மாணவ மாணவிகள் குழுவாக இரத்ததானம் செய்யவதற்கு பட்டுக்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அவர்களை 9442318881 என்கிற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றுகூறினார்,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.