.

Pages

Friday, January 23, 2015

துபாயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பூனைக்குட்டி !

பொதுவாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்திணருகின்ற மாநகரம் துபை. அதிலும் நேற்று பரபரப்பான வியாழன் இரவுடன் தற்போது துபையில் நடைபெற்று வரும் 'வர்த்தக திருவிழா' கூட்டமும் கூடுதலாக இணைந்து கொள்ள துபை சாலைகளில் போக்குவரத்தின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.

நேற்றிரவு சுமார் 10.15 மணியளவில், மிகவும் பரபரப்பாக காணப்பட்ட நைஃப் சிக்னலில் தான் குட்டிப்பூனை ஒன்று புகுந்து போக்குவரத்தை களேபரப்படுத்தியது. சிக்னலில் நின்று கொண்டிருந்த கார்களுக்கடியில் புகுந்து பயத்தில் அங்குமிங்கும் ஓடிய பூனைக்குட்டியை காப்பதற்காக போக்குவரத்து போலீஸார் முதல் பாதசாரிகள் வரை அதனுடன் ஒரு போராடி பிடித்து வெளியே விட அது மீண்டும் பழையபடி வாகனங்களுக்கு அடியில் சென்றது.

இந்த குட்டிப்பூனையை வாகனங்களில் அடிபடாமல் காக்கும் போராட்டத்தால் நைஃப் போலீஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்ததும், வாகன ஓட்டிகள் பொறுமையாக பூனைக்குட்டி மீண்டும் பிடிபடும் வரை பொறுமையுடன் காத்திருந்து சென்றதும் சிலிர்ப்பான சம்பவமாக அமைந்தது.

ஒருவழியாக பூனைக்குட்டியை பிடித்து விட்டாலும் அந்த பூனைக்குட்டியை படம் புடிக்க முடியலியே என்ற ஆதங்கத்துடன்...

மதினாப்பா பேரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.