.

Pages

Monday, January 26, 2015

கடற்கரைதெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்ட குடியரசு தின நிகழ்ச்சி !

இந்திய குடியரசு பெற்று 65 ஆண்டுகள் கழிந்து 66 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை 8 மணியளவில் கடற்கரைதெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கடற்கரை தெரு ஜாமத் நிர்வாகி எஸ்.எம்.ஏ அக்பர் ஹாஜியார் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் கடற்கரைதெரு ஜமாஅத் நிர்வாகிகள் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர், மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

முன்னதாக மாணவ மாணவிகளின் அறிவுத்திறன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.

    வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. வேற்றுமையில் ஒற்றுமை காணும் வளமான பாரதம் உருவாக்க அனைவருக்கும் என் இனிய 66 வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.