இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் ஸ்தம்பித்தன. பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஐநூறுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் அறிவழகன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். வட்டச்செயலாளர் ஆர்.ஞானசூரியன் வரவேற்றுப் பேசினார். வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் மா.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட துணைத்தலைவர் நெடுஞ்செழியன், வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகி தங்கராசு ஆகியோர் உரையாற்றினர். நல்லதம்பி நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படங்கள்:
எஸ். ஜகுபர் அலி, பேராவூரணி.
ஓஹோ, இன்று ஒருநாளைக்கு தமிழ்நாட்டில் லஞ்சம் குறைஞ்சு இருக்குமுன்னு சொல்லுங்க. அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்து விவரங்களை ஆராய்ந்தால் பார்த்தால் உண்மை நிலையை அறிய முடியும். அதிகாரிகளும், ஆட்சியில் இருப்பவர்களும் சேர்ந்து தமிழகத்தை கொள்ளை அடித்து விட்டார்கள். மக்கள் அண்ணாவையும் எம்ஜியாரையும் புகழ்கிறார்கள் ஆனால் தற்போது திராவிட தலைவர்கள் வழக்குகளுக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள், கேவலம்.
ReplyDelete