.

Pages

Monday, January 26, 2015

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 'அழகு மிகு அதிரை' தூய்மை திட்டம் !

இந்திய குடியரசு பெற்று 65 ஆண்டுகள் கழிந்து 66 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை 8 மணியளவில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து குடியரசு தின உரை நிகழ்த்தினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஓகேஎம் சிபகத்துல்லா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இதையடுத்து இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில்  'அழகு மிகு அதிரை' என்ற தூய்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் அதிரையில் உள்ள முக்கிய பகுதிகளை தத்தெடுத்து அங்கு காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்தும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த பணியில் மொத்தம் 50 மாணவர்கள் ஈடுபட்டனர். சுகாதாரத்தை வலியுறுத்தி கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இவர்களுக்கு உதவியாக அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் சென்றனர்.

முன்னதாக 'அழகு மிகு அதிரை' தூய்மை திட்டத்தை பள்ளி முதல்வர் பேராசிரியர் பர்கத், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் ஓகேஎம் சிபகத்துல்லா, முஹம்மது சலீம், முஹம்மது இப்ராஹீம் மற்றும் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் துவக்கி வைத்தனர்.

2 comments:

  1. அனைவருக்கும் என் இனிய 66 வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள். 'அழகு மிகு அதிரை' - தூய்மை திட்டம் வெற்றியடைய வாழ்த்துக்களும் கூட.

    ReplyDelete
  2. தூய்மை திட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பது பாராட்டுக்குரியது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.