.

Pages

Saturday, January 31, 2015

கடும் பனிப்பொழிவில் மூழ்கிய பிரிட்டன் !

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் நாட்டின் முக்கிய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்டிக் கடலிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றால், பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இதன் காரணமாக, பெரும்பாலான உள்ளூர் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகன சேவைகளை நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாகன போக்குவரத்தும், காலநிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், வடக்கு ஐர்லாந்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் வடக்குப்புற சாலைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண வாகனங்கள் மட்டுமின்றி அவசர மருத்துவ வாகனங்களும் சாலைகளை கடக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகியது.

பனிப்பொழிவின் பாதிப்புகளை குறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், Northern Ireland, Derbyshire மற்றும் Cumbria நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வடக்கு ஸ்கொட்லாந்து, ஐர்லாந்து மற்றும் வடக்கு பிரித்தானியாவில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஞாயிறு மற்றும் திங்கள் திகதிகளில் பிரித்தானியாவின் பெரும் பகுதிகளில் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடுங்குளிர் வீச வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Huyton மற்றும் Liverpool உள்ளிட்ட சாலைகளில் வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், அசம்பாவிதங்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் பெரும்பாலன நகரங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

1 comment:

  1. நான் பிரிட்டனில் இருந்தபோது ​-13 க்கு அதிகமான குளிரை சந்திதலில்லை .ஆனால் கனடாவில் -35 Wind chill டன் கூடிய குளிரை சந்தித்தவன். தற்போது ஜப்பானில் அதிக பட்சம் -7 ஆக உள்ளது .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.