நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் கே. வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம் வரவேற்றார். புட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் என். ஆர். ரெங்கராஜன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து விழாப்பேருரை ஆற்றினார். தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தை சார்ந்த மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப்பிள்ளை இளநிலை பூச்சியியல் வல்லுநர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு சிக்குன் குன்யா மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் அவை தோன்றும் விதம் பரவும் முறை கட்டுப்படுத்தும் முறை சிகிச்சை முறைகள் பற்றி படக்காட்சிகளுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.டெங்கு தடுப்பு சுகாதார உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட லயன் சங்க தலைவர் பேராசிரியர் சையத் அகமது கபீர் ஜே.சி. ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் மண்டல துணைத் தலைவர் எஸ். கார்த்திகேயன் உறுப்பினர்கள் வீ. நாராயணன் ராஜூ ரமேஷ்கண்ணா துப்புரவு ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவிகளால் டெங்கு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புகை மூட்டம் கொசுப்புழு ஒழிப்பு பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம் நன்றி கூறினார்.
பட்டுக் கோட்டை பேருந்து நிலையத்தில் மூக்கை பிடித்துக்கொண்டு பஸ்க்காக நிற்க வேண்டிஉள்ளது, சுகாதாரமே கேள்விகுறியா இருக்கு; டெங்கு விழிப்புணர்வு நடத்துவது வியப்பிலும் வியப்பு. மரம் வளர்ப்போம் மாங்காய் பறிப்போம் என்று சொல்வது பேச்சுக்கு நல்லா தான் இருக்கு செயலுக்கு வரணுமே!
ReplyDelete