.

Pages

Friday, January 30, 2015

பட்டுக்கோட்டையில் 350 நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம் !

பட்டுக்கோட்டை செந்தில் குமரன் திருமண மண்டபத்தில் 30.01.2015 அன்று தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை பட்டுக்கோட்டை நகராட்சி ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் இணைந்து பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கான டெங்கு சிக்குன் குன்யா மற்றும் நீரினால் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாமை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் கே. வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம் வரவேற்றார். புட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் என். ஆர். ரெங்கராஜன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து விழாப்பேருரை ஆற்றினார். தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தை சார்ந்த மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப்பிள்ளை இளநிலை பூச்சியியல் வல்லுநர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு சிக்குன் குன்யா மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் அவை தோன்றும் விதம் பரவும் முறை கட்டுப்படுத்தும் முறை சிகிச்சை முறைகள் பற்றி படக்காட்சிகளுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.டெங்கு தடுப்பு சுகாதார உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட லயன் சங்க தலைவர் பேராசிரியர் சையத் அகமது கபீர் ஜே.சி. ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் மண்டல துணைத் தலைவர் எஸ். கார்த்திகேயன் உறுப்பினர்கள் வீ. நாராயணன் ராஜூ ரமேஷ்கண்ணா துப்புரவு ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவிகளால் டெங்கு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புகை மூட்டம் கொசுப்புழு ஒழிப்பு பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம் நன்றி கூறினார்.

1 comment:

  1. பட்டுக் கோட்டை பேருந்து நிலையத்தில் மூக்கை பிடித்துக்கொண்டு பஸ்க்காக நிற்க வேண்டிஉள்ளது, சுகாதாரமே கேள்விகுறியா இருக்கு; டெங்கு விழிப்புணர்வு நடத்துவது வியப்பிலும் வியப்பு. மரம் வளர்ப்போம் மாங்காய் பறிப்போம் என்று சொல்வது பேச்சுக்கு நல்லா தான் இருக்கு செயலுக்கு வரணுமே!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.