.

Pages

Monday, January 26, 2015

அதிரை பைத்துல்மாலில் கொண்டாடப்பட்ட குடியரசு தின நிகழ்ச்சி!

இந்திய குடியரசு பெற்று 65 ஆண்டுகள் கழிந்து 65 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை 9 மணியளவில் அதிரை பைத்துல்மாலில் குடியரசு தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் துணை தலைவர் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ் கே எம் ஹாஜா முகைதீன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.

முன்னதாக அதிரை பைத்துல்மால் துணை பொருளாளர் அப்துல் மாலிக் கிராத் வழங்க, அதிரை பைத்துல்மால் துணை செயலாளர் முஹம்மது இப்ராஹீம் வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியாக நன்றியுரையை பைத்துல்மால் பொருளாளர் ஓகேஎம் சிபஹத்துல்லா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மாலின் நிர்வாகிகள், அலுவலக உதவியாளர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.

    வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.