.

Pages

Wednesday, January 28, 2015

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமுமுக செயல்வீரர்கள் கூட்டம் !

பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக தமுமுக வின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் தஞ்சை பாதுஷா தலைமையில் பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை அதிரை நகர பொருளாளர் செய்யது புகாரி கிராத் ஓதி துவங்கி வைத்தார். தமுமுக மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா வரவேற்புரை ஆற்றினார், சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அவர்கள் நடைபெற விருக்கும் தமுமுக வின் தேர்தல் முறைகளை மிக விரிவாக விளக்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயளாளர் ராவுத்தர்ஷா, மாநில வர்த்தக அணி செயளாளர் கலந்தர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பட்டுக்கோட்டை நகர செயலாளர் ஷேக் முஹைதீன் நன்றி உரை நிகழ்த்தினார். இதில் தஞ்சை தெற்கு மாவட்ட நகர, ஒன்றிய , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.