.

Pages

Wednesday, January 28, 2015

கும்பகோணம் அல்-அமீன் பள்ளியில் நடைபெற்ற திருக்குர்ஆன் மாநாடு!


கும்பகோணம் அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான திருக்குர்ஆன் மாநாடு நடைபெற்றது. ஜமாத்உலமா தலைவர் மஹ்மூதுல்ஹசன் தலைமை வகித் தார். தொழில்அதிபர்கள் அப்துல்பாரி, சாகுல்அமீது, ஜகபர்அலி, கமாலுதீன், முகமதுஜியாவுதீன், சம்சுதீன், அஷ்ரப்அலி, ஹபிபூர்ரஹ்மான் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய அளவில் உள்ள மார்க்க அறிஞர்கள் தேவபந்த் வாசிப், ராம்பூர்பர்ஹத், உத்தரபிரதேசம் பைஜான், அசாம் கலிலூர், ஹைதராபாத் அப்துல்ஹாதி, கர்நாடகா உசேன், கேரளா முகம்மது அஸத், உடபட பலர் கலந்துகொண்டனர்

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக  பார்வையற்ற கர்நாடகாவைச் சேர்ந்த அனிஸுர், 8 வயது  முகம்மது முபஸ்ஸிர் கிராத் ஓதியது அனைவரையும் கவர்ந்தது.

 மாநாட்டையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ‘மதரஸா’ க்களில் பயிலும் மாணவர்களுக்கு இடையே கிராஅத் போட்டி நடத்தப்பட்டு இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாநாட்டில் ஜியாவுர் ரஹ் மான், முகம்மது அஸத், ஜிர்ஜிஸ், அகம்மது தம்பி, டாக்டர் அன்வர் பாட்சா மற்றும்  வட்டார ஜமாத்துல் உலமாசபை, கிஸ்வா, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.