.

Pages

Wednesday, January 28, 2015

முகமது நபியை அவமதிப்பதா ?

முகமது நபியை அவமதிக்கும் பேஸ்புக் பக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

நபியை அவமதிக்கும் குறிப்பிட்ட பக்கங்களை நீக்காவிட்டால், நாடு முழுவதும் பேஸ்புக் சமூக வலைத்தளம் தடை செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று விமர்சனத்துக்கு உள்ளான சில பேஸ்புக் பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

இருப்பினும் முகமது நபியை அவமதிக்கும் பக்கங்கள் உபயோகத்தில் இருப்பதாகவும், அவைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

பாரிஸ் பத்திரிக்கை அலுவலகத் தாக்குதலை தொடர்ந்து, இணையதளங்களில் முகமது நபியை அவமதிக்கும் வகையில் செய்திகள் பரப்பப்படுகின்றனவா என விசாரிக்க துருக்கி நாட்டு வழக்கறிஞர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் முடிவாக பேஸ்புக் பக்கங்களில் முகமது நபியை பற்றி அவதூறான செய்திகள் வருவதை கண்டறிந்து அவற்றை நீக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தனர். இதன் விளைவாகவே நபிகளை அவமதிக்கும் பக்கங்களை நீக்க பேஸ்புக் நிறுவனத்திற்கு துருக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.