.

Pages

Wednesday, March 30, 2016

பட்டுக்கோட்டை கரிக்காடு அருகே அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு!

பட்டுக்கோட்டை அருகே உள்ள நாடியம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மலர்விழி (47). இவர் நேற்று இரவு 7 மணியளவில் பட்டுக்கோட்டை வந்தார். அங்குள்ள கரிக்காடு ஸ்டேட் பாங்க் காலனியில் ஆட்டோவை வாடகைக்கு பேச சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மலர்விழி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

பட்டுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ். இவரது மனைவி சந்தார்க் (51). இவர் அங்குள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் கடைக்கு நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சந்தார்க் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இந்த இரு சம்பவத்திலும் ஒரே நபர்கள் தான் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு விசாரணை நடத்தி வருகிறார்.

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.