சீனாவில் அதீத மொபைல் மோகம் காரணமாக சிறுவன் ஒருவன் தனது விரலை துண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சூழோ நகரில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 11 வயதான பெங். இவருக்கு அவரது தந்தை புது மாடல் மொபைல் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.
அந்த மொபைலில் எந்த நேரமும் சிறுவன் பெங் விளையாடி பொழுதை கழித்து வருவது அவரது தந்தைக்கு கோபத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதத்தினிடையே சிறுவன் தனது சுண்டு விரலை துண்டித்துள்ளான்.
பதறிப்போன அவரது தந்தை உடனடியாக அந்த துண்டிக்கப்பட்ட விரலுடன் சிறுவன் பெங்கையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். 3 மணி நேரம் நீண்ட அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரலை அந்த சிறுவனின் கையுடன் இணைத்துள்ளனர்.
வெற்றிகரமாக தற்போது இணைத்துள்ளதாக கூறிய மருத்துவர்கள், இனி மேல்தான் இணைக்கப்பட்ட அந்த விரலுடன் உடல் ஒத்துழைக்குமா என்பது தெரியவரும் என்றனர். மேலும் இணைக்கப்பட்டுள்ள விரல் குணமடையும் வரை அழுத்தம் தராமல் இருந்தால் மட்டுமே விரைந்து குணமடையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தந்தையுடன் ஏற்பட்ட கோபத்தால் விரலை துண்டித்த சிறுவன் இனி மொபைல் விளையாட்டை நீண்ட நாளுக்கு ஆட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் சூழோ நகரில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 11 வயதான பெங். இவருக்கு அவரது தந்தை புது மாடல் மொபைல் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.
அந்த மொபைலில் எந்த நேரமும் சிறுவன் பெங் விளையாடி பொழுதை கழித்து வருவது அவரது தந்தைக்கு கோபத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதத்தினிடையே சிறுவன் தனது சுண்டு விரலை துண்டித்துள்ளான்.
பதறிப்போன அவரது தந்தை உடனடியாக அந்த துண்டிக்கப்பட்ட விரலுடன் சிறுவன் பெங்கையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். 3 மணி நேரம் நீண்ட அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரலை அந்த சிறுவனின் கையுடன் இணைத்துள்ளனர்.
வெற்றிகரமாக தற்போது இணைத்துள்ளதாக கூறிய மருத்துவர்கள், இனி மேல்தான் இணைக்கப்பட்ட அந்த விரலுடன் உடல் ஒத்துழைக்குமா என்பது தெரியவரும் என்றனர். மேலும் இணைக்கப்பட்டுள்ள விரல் குணமடையும் வரை அழுத்தம் தராமல் இருந்தால் மட்டுமே விரைந்து குணமடையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தந்தையுடன் ஏற்பட்ட கோபத்தால் விரலை துண்டித்த சிறுவன் இனி மொபைல் விளையாட்டை நீண்ட நாளுக்கு ஆட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.