.

Pages

Thursday, March 24, 2016

பணி ஓய்வு பெரும் கல்லூரி முதல்வர் - பேராசிரியர் ஆண்டு விழாவில் கெளரவிப்பு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 24-03-2016 ] காலை கல்லூரி கலையரங்கில் 61 வது கல்லூரி ஆண்டு விழா மற்றும் நிறுவன நாள் விழா நடந்தது.

இதில் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெற உள்ள கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்களின் சிறப்பான பணியை பாராட்டி பொற்க்கிழி மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

அதே போல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேதியியல் துறையின் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற உள்ள முனைவர் அக்பர் உசேன் அவர்களின் சிறப்பான பணியை பாராட்டி பொற்க்கிழி மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது. இவற்றை எம்.கே.என் ட்ரஸ்ட் நிர்வாகி நீதிபதி கே. சம்பத் வழங்கினார்.

1 comment:

  1. பழக இனிமை! பார்க்க எளிமை ! முதல்வர் ஜலால் சார் அவர்களைப் பிரிவதை நினைக்க கஷ்டமாக இருக்கிறது. அவர்களுக்கு இறைவன் நல்ல சுகத்தையும் தனது அருளையும் வழங்குவானாக!

    அதே போல் அக்பர் உசேன் சார் அவர்களிடம் பழகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கேள்விப்பட்டு இருக்கிறோம். அவர்களுடைய நல வாழ்வுக்காகவும் துஆச் செய்கிறோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.