.

Pages

Tuesday, March 22, 2016

அதிரையில் 'வட்டியில்லா வங்கி' அமைப்பதில் ஆர்வம் காட்டும் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் !

இந்தியாவில் வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி" என்ற இலக்குடன் பயணித்து வரும் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனத்தின் சார்பில் மதுரை கீழவெளிவீதியில் “வட்டியில்லா தமிழகம் நோக்கி” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இயக்குனர் அஹமத் மீரான் வரவேற்றார். நிறுவனர் மற்றும் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அப்துல்அஹத் தலைமை வகித்தார்.

கருத்தரங்கில் வட்டியின் விபரீதங்களும்,  தீர்வும் என்ற தலைப்பில் தமிழ்நாடு உலமா ஜமாஅத்துல் தலைவர் அப்துர்  ரஹ்மான் மிஸ்பாகி, “இலங்கையில் இஸ்லாமிய வங்கிகள் வளர்ந்த வரலாறு” என்ற  தலைப்பில் இலங்கை ஜமிய்யத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி, “இந்தியாவில்  வட்டியில்லா வங்கிகளுக்கான அத்தியாவசியம்” என்ற தலைப்பில் ஹபீப் முஹம்மத் உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாடுகளை மதுரை கிளைத்தலைவர் யாசின்முகம்மது, செயலாளர் ஜமான் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்தரங்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் எஸ்.ஏ அப்துல் ஹமீது (செயலாளர்), ஏ.எஸ். அஹமது ஜலீல் (துணைச்செயலாளர்), ஏ. முஹம்மது முகைதீன் (துணைத்தலைவர்), பேரா. முஹம்மது அப்துல் காதர் (உறுப்பினர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் அதிரையில் வட்டியில்லா வங்கி அமைப்பது குறித்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

1 comment:

  1. நன்றி. மிகவும் அவசியமானது. முயற்சி க்கு வாழ்த்துகள்!!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.