.

Pages

Tuesday, March 15, 2016

தேர்தல் விழிப்புணர்வு பிராச்சார பணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சட்ட மன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தி தஞ்சாவூர் அரசு குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.

இப்பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். மேலும் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மே 16ல் நடைபெறுகிறது.   தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவும், ஜனநாயக கடமையாற்றிடவும், அனைவரும் உறுதியேற்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மாணவியர்கள் நடத்துகின்றனர்.  இது போன்ற விழிப்புணர்வு பணிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன். அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் தீபக் ஜேக்கப், வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், வட்டாட்சியர் தங்கபிரபாகரன், ரெட்கிராஸ் தலைவர் எஸ்.ராஜமாணிக்கம், பொருளாளர் முத்துக்குமார், டாக்டர் பி.வி.வரதராஜன் மற்றும் மாணவ மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.