அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 67 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று பள்ளியில் நடந்தது.
விழாவிற்கு காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தலைமையுரை நிகழ்த்தினார். காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் மொய்தீன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ. மஹபூப் அலி வரவேற்புரை ஆற்றி, பின்னர் ஆண்டறிக்கையை வாசித்தார் அதில் பள்ளியின் சார்பில் நடப்பு ஆண்டில் கல்வியில் விளையாட்டில் மாணவர்கள் - ஆசிரியர்கள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளி ஆற்றிவரும் சமூக பணிகளையும், பள்ளியின் சார்பில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் குறிப்பிட்டு பேசினார்.
சிறப்பு பேச்சாளராக கவிஞர் ராஜப்பா கலந்துகொண்டு சிந்தனை தரும் சொற்பொழிவை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நாகராஜன் தொகுத்து வழங்கினார்.
பள்ளியின் சார்பில் நடப்பாண்டில் கல்வி - விளையாட்டில் சாதனை நிகழ்த்திய ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள், பொன்னாடைகள் போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் நடந்த பத்தாம் வகுப்பு - பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இவற்றை பிரபல தொழில் அதிபர் அல் நூர் ஹஜ் சர்வீஸ் முஹம்மது அலி வழங்கினார். மேலும் மாநில அளவில் நடந்த கால்பந்தாட்ட போட்டிகளில் சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு பரிசாக கிடைத்த 4 கால்பந்துகளை பள்ளிக்கு வழங்கினார்கள்.
விழா முடிவில் பள்ளி தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் நன்றி கூறினார். விழாவில் ஊர் பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள் - மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.