அதிராம்பட்டினம் மார்ச்-31
திருவாரூர் மாவட்டம், தில்லை விளாகம் அருகே உள்ள செங்கங்காடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 40 ). சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவரை திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்கு அழைத்து வர நேற்று இரவு இவரது தந்தை பக்கரிசாமி ( வயது 65 ) தாய் ஜெகதாம்பால் ( வயது 60 ) , மனைவி சுமதி ( வயது 35 ), குழந்தைகள் கனிதா ( வயது 12), சாரதி ( வயது 7 ), வர்ஷினி ( வயது 6 ) ஆகியோர் அம்பாஸ்டர் வாகனத்தில் சென்றனர். வாகனத்தை ரகுவரன் ( வயது 22 ) என்பவர் ஓட்டினார்.
ஏர்போர்ட்டில் லோகநாதனை ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிரை அருகே உள்ள பரக்கலக்கோட்டை சாலையில் வந்த போது எதிரே உள்ள பனை மரத்தில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் ரகுவரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வாகனத்தில் பயணம் செய்த மற்ற அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவர் அயர்ந்து தூங்கியதே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம், தில்லை விளாகம் அருகே உள்ள செங்கங்காடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 40 ). சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவரை திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்கு அழைத்து வர நேற்று இரவு இவரது தந்தை பக்கரிசாமி ( வயது 65 ) தாய் ஜெகதாம்பால் ( வயது 60 ) , மனைவி சுமதி ( வயது 35 ), குழந்தைகள் கனிதா ( வயது 12), சாரதி ( வயது 7 ), வர்ஷினி ( வயது 6 ) ஆகியோர் அம்பாஸ்டர் வாகனத்தில் சென்றனர். வாகனத்தை ரகுவரன் ( வயது 22 ) என்பவர் ஓட்டினார்.
ஏர்போர்ட்டில் லோகநாதனை ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிரை அருகே உள்ள பரக்கலக்கோட்டை சாலையில் வந்த போது எதிரே உள்ள பனை மரத்தில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுனர் ரகுவரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வாகனத்தில் பயணம் செய்த மற்ற அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவர் அயர்ந்து தூங்கியதே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.