.

Pages

Wednesday, March 9, 2016

பட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பதற்கான இடம் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்ய  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் சார் ஆட்சியர் திரு.டி.எஸ். ராஜசேகர் அவர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்ட மன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெறுவதற்கான இடத்தினையும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள், ஊடக மையம் அமைப்பத்றகான இடத்தினையும் தேர்வு செய்திடவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் மேனன், செயற்பொறியாளர் (கட்டிடம்) ரபீந்தர், தேர்தல் அலுவலர் ஆர்.நாகராஜன்,  வட்டாட்சியர்கள் குருமூர்த்தி, ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.