.

Pages

Wednesday, March 30, 2016

முத்துப்பேட்டை லகூன் குட்டித் தீவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு !

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே அது மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்தி காடுகளின் இயற்கை அழகும் அதே போல் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகும், ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தமும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் கடுமையான வெப்பம் அக்னி நட்சத்திரத்திற்கு முன்பாகவே அதிகரித்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்திலும் வெயில் தாக்கம் ரொம்பவே அதிகமாக உள்ளது. இருந்தாலும் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்த நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும், அரசு அலுவலர்கள் உட்பட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். தற்பொழுது கடும் வெப்பத்திலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துக் கொண்டு இருப்பதால்; ஆசாத்நகர் மற்றும் ஜாம்புவானோடை படகு துறையில் சுற்றுலா பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் மீன்பிடி படகுகள் அணிவகுத்து நிற்கிறது.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.