.

Pages

Monday, March 28, 2016

அதிரையில் உப்பு உற்பத்தி தொடங்கியது ! [ படங்கள் இணைப்பு ]

அதிராம்பட்டினம், மார்ச்-28
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி செய்வதற்கு முதல் கட்டப்பணிகள் துவங்கியது. பாத்தி கட்டுதல், பாத்தி சீர்அமைத்தல், பாத்தி மிதித்தல், கட்டை போடுதல், கடல் வாய்க்கால் சீரமைத்தல், கடல் வாய்க்கால் வண்டல் அகற்றுதல், கடல் முகத்துவாரம் சீர் அமைத்தல், போன்ற பணிகள் முடிந்து கடல் நீரை பாத்தியில் பாய்ச்சும் பணி முடிவடைந்து உப்பளங்களில் விளைந்த உப்பை வாரும் பணி துவங்கி உள்ளது.  இதில் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அனைத்து உப்பளங்களிலும் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளது.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் செல்வராஜ் என்பவர் கூறுகையில், 'மழைக்காலம் முடிந்து உப்பளங்களில் தேங்கி உள்ள மழைநீரை பம்ப் செட் உதவியுடன் வெளியேற்றி மூன்று மாதங்களாக முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது நேற்று முதல் உப்பு உற்பத்தி துவங்கியுள்ளது' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.