.

Pages

Tuesday, March 29, 2016

அதிரையில் 'தீயணைப்பு நிலையம்' அமைக்க கோரி பேராசிரியர் அனுப்பிய கடிதம் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஏ. ஹாஜா அப்துல் காதர். அதிரை நடுத்தெருவில் வசித்து வருகிறார்.

பிறந்த ஊர் மீது அதிக அக்கறை கொண்ட இவர் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக அவ்வப்போது 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் வாசகர் பக்கத்திற்கு கடிதங்கள் அனுப்பி வருகிறார். இவரது பல கோரிக்கைகள் அவ்வபோது பிரசுரமாகி வருகிறது.

இதில் அதிரை உள்ளிட்ட பகுதிகளில் ஆமை வேகத்தில் நடந்து வரும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணியை துரிதப்படுத்தக் கோரி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை கடந்த 17-02-2016 அன்று வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது. மேலும் அதிரையில் அதிகரித்து வரும் பொதுமக்கள், வர்த்தகம், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் குறிப்பாக செக்கடி மேடு, மேலத்தெரு, சிஎம்பி லேன், கடற்கரைத்தெரு, முத்துப்பேட்டை ரோடு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் ஏடிஎம் சேவையை தொடங்க வலியுறுத்தி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை கடந்த 08-03-2016 அன்று வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது.

இந்த நிலையில் அதிரை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் அடிக்கடி நிகழும் தீ விபத்தை கருத்தில் கொண்டு அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரி இவர் எழுதி அனுப்பிய கோரிக்கை கடிதம் இன்று [ 29-03-2016 ] வெளிவந்த 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமாகியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.