.

Pages

Tuesday, May 17, 2016

+2 தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சாதனையாளர்கள் ! ( முழு விவரங்கள் )

தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 156 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 90 சதவீத தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டைவீட 4 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.

அதேபோல் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 194 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 92  சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது.

அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 56 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 93 சதவீத தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டைவீட 3 சதவீதம் கூடுதலாக பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள மாணவிகள் மற்றும் பள்ளிகளின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர்: ஹபிலா 
த/பெ: ரஹ்மத்துல்லாஹ்
பெற்ற மதிப்பெண்கள்: 1134 /1200
பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

இரண்டாம் இடம்:
பெயர் : சஹ்ரீன் பானு
த/பெ : ஹாஜா அலாவுதீன்
பெற்ற மதிப்பெண்கள் : 1107 / 1200
பள்ளியின் பெயர்: காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

மூன்றாம் இடம் :
பெயர்: தஹ்ஸினா மரியம்
த/பெ: ஷாகுல் ஹமீது
பெற்ற மதிப்பெண்கள்: 1091 /1200
பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

நான்காம் இடம் :
பெயர்: ஜெஸிலா பாத்திமா 
த/பெ: அஹமது மன்சூர்
பெற்ற மதிப்பெண்கள்: 1088 /1200
பள்ளியின் பெயர்:இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

2 comments:

  1. "மதி"ப்"பெண்கள்" . வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. முதலில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மணிகளுக்கு வாழ்த்துக்கள் இரண்டாவது தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரட்டிப்பு வாழ்த்துக்கள் இது முடிவல்ல " வாசலுக்கு வா வாழ்கையை தேடு " உனக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரவே இந்த தோல்வி உமக்கு பரிசாக கிடைத்துள்ளது மாணவ செல்வமே ....இனியாவது நம் கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும் மதிபெண் முறையை ரத்து செய்யவேண்டும் தரமான கல்விக்கு இந்திய அரசு உறுதி தரவேண்டும் மானியத்தை கொடுப்பதை விட்டுவிட்டு படிப்பிற்கு இலவசங்களை அறிவிக்க வேண்டும் தொழிலதிபர்களை காப்பது போல நமது நாட்டு மாணவர்களின் கல்வி அனைவருக்கும் அனைத்தும் இலவசமாக படிக்கவைக்க வேண்டும் கட்டண கல்விமுறையை ரத்து செய்ய வேண்டும். மாற்றம் நிகழும்... மனதை தளராதே!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.