அதிராம்பட்டினம் மே-12
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நல்லடையாளங்களுள் ஒன்று அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி. இங்கு வருடந்தோறும் ஆலிம்கள் பலரை உருவாக்கி அனுப்பி வைத்த சிறப்பை இந்த கல்லூரி பெற்றுவருகிறது.
இன்று [ 12-05-2016 ] காலை ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் வளாகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு L.M.S. அப்துல் காதர் ஆலிம் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் K.T. முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தி மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கி கெளரவித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை அல் மதினத்துல் இல்ம் கல்லூரியின் முதல்வர் A. முஹம்மது ஷப்பீர் அலி ஆலிம் அவர்கள் பட்டமளிப்பு பேருரை நிகழ்த்தினார்.
முன்னதாக அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மது நெய்னா ஆலிம் வரவேற்புரை ஆற்றினார். மேலும் விழாவில் கல்லூரி பேராசிரியர் மவ்லவி தேங்கை சரபுதீன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் பலர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
இதில் அதிரையின் பல்வேறு மஹல்லாக்களை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நல்லடையாளங்களுள் ஒன்று அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி. இங்கு வருடந்தோறும் ஆலிம்கள் பலரை உருவாக்கி அனுப்பி வைத்த சிறப்பை இந்த கல்லூரி பெற்றுவருகிறது.
இன்று [ 12-05-2016 ] காலை ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் வளாகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு L.M.S. அப்துல் காதர் ஆலிம் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் K.T. முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தி மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கி கெளரவித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை அல் மதினத்துல் இல்ம் கல்லூரியின் முதல்வர் A. முஹம்மது ஷப்பீர் அலி ஆலிம் அவர்கள் பட்டமளிப்பு பேருரை நிகழ்த்தினார்.
முன்னதாக அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மது நெய்னா ஆலிம் வரவேற்புரை ஆற்றினார். மேலும் விழாவில் கல்லூரி பேராசிரியர் மவ்லவி தேங்கை சரபுதீன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் பலர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
இதில் அதிரையின் பல்வேறு மஹல்லாக்களை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.