.

Pages

Wednesday, May 25, 2016

அதிரை சிறுவர்கள் முதல் / இரண்டாம் இடங்கள் பிடித்து சாதனை !

அதிராம்பட்டினம் மே-25
தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் சென்னை மக்தப் தல்லீம் கமிட்டி இணைந்து மக்தப் விழிப்புணர்வு மாநாடு போட்டிகள் கும்பகோணத்தில் நடந்தது. இதில் கிராத் போட்டியில் அதிரை சிறுவர்கள் கலந்துகொண்டு முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ சாகுல் ஹமீது. பத்திரிகை நிருபர். இவரது மகன் அஸ்பக் அஹமது ( வயது 13 ) அதிராம்பட்டினம் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஏ.ஜே முஹம்மது நெய்னா. இவரது மகன் அப்துல் ஜப்பார்( வயது 13 ).

கும்பகோணத்தில் நேற்று நடந்த மக்தப் விழிப்புணர்வு மாநாட்டு  கிராத் போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தை அஸ்பக் அஹமதும், இரண்டாம் இடத்தை அப்துல் ஜப்பாரும் பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளனர். வெற்றி பெற்ற இருவருக்கும் பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்து சுமார் 400 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை நிகழ்த்தியுள்ள சிறுவர்களுக்கு பெற்றோர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் இடம் பிடித்துள்ள சிறுவன் அஸ்பக் அஹமது அதிரையில் நடந்த பல்வேறு இஸ்லாமியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் - பாராட்டு சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

8 comments:

  1. மாஷா அல்லாஹ்..! எனது உடன் பிறந்த தம்பி கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.