.

Pages

Thursday, May 26, 2016

தேனீ வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் அதிரை இளைஞர் !

சுத்தமான தேன் மருத்துவகுணம் வாய்ந்தது. சூப்பர் மார்க்கெட் முதல் காதி கிராப்ட் கடை வரை தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி கிராக்கி உண்டு. தரமான தேன் என்றால் நல்ல விலை கொடுக்க வாடிக்கையாளர்கள் தயங்குவதில்லை.

சரி விசயத்திற்கு வரும்வோம்...
அதிரையை சேர்ந்தவர் அன்வர். இவரது மகன் சேக். அமெரிக்காவில் பணியாற்றி விட்டு உள்ளூரில் தங்கிருந்து சுய தொழில் தொடங்க முடிவெடுத்தவர் நேராக மதுரை சென்று அங்குள்ள தேனீ வளர்ப்பு பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் ஊர் திரும்பியவர் சொந்தமாக தேனீ வளர்ப்பில் தற்போது ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக தென்னந்தோப்புகளில் தேன் கூடுகள் அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார்.

இதுகுறித்து அதிரை வரலாற்றில் முதன் முறையாக தேன் வளர்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் சேக் நம்மிடம் கூறுகையில்...
தேனீ வளர்ப்புக்காக மதுரை சென்று அங்கு சிறப்பு பயிற்சி பெற்றேன். பின்னர் ஊர் திரும்பியவுடன் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். மக்களுக்கு நியாயமான விலையில் சுத்தமான தேனை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இதில் ஈடுபட்டு வருகிறேன். தென்னை தோப்புகளில் பெட்டிகள் மூலம் தேனீக்கள் வளர்க்கப்படுகிறது.

சுத்தமான தேன் பல்வேறு மருத்துவ குணமுடையது. குறிப்பாக குண்டு உடம்பு இளைக்க, செரிமானம், சளி, காய்ச்சல், மூட்டு வலி என பல நோய்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தேன் தேவைப்படுவோர் முன்பதிவு பதிவு செய்வது அவசியம். இலவச டோர் டெலிவரி வசதி உண்டு' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தேன் முன்பதிவு தொடர்புக்கு:
9994068870
 

2 comments:

  1. Masha-Allah. Really appreciate your effort to get into new venture of growing honey bee. Having Honey is sunnah, that too home grown and pure makes it more halal.

    Hope you succeed in this venture. Good luck Sheik.

    ReplyDelete
  2. தேனீ வளர்ப்பில் ஈடுபடுங்கள்; திகட்டத் திகட்ட வருவாய் ஈட்டுங்கள்!- வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.