தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த வருடம் பணிகள் நடந்தது. மேலும் ஆலடி குளம், செக்கடி குளம் உள்ளிட்ட குளங்களுக்கும் நீர் இறைக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைக்கும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது. பம்பிங் மூலம் இறைக்கும் ஆற்றுநீரை முதலில் ஆலடிக்குளத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள செக்கடி குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களுக்கும் நீர் இறைக்கும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலடி குளம் நீர் வரத்தை இன்று காலை அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குளத்தில் சூழ்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
வாழ்துக்கல்
ReplyDeleteதலைவரின் முயர்சிக்கு கிடைத்த வெற்றி
வாழ்துக்கல்
ReplyDeleteதலைவரின் முயர்சிக்கு கிடைத்த வெற்றி
Jaakallahu Khairan for all you do.. Why is the Kulam so dirty. Looks like its dumpster with plastics. Can any action be taken to keep it clean
ReplyDelete