தனது மகன்கள் வெற்றி குறித்து 3 M நிறுவன உரிமையாளர் முஹம்மது சலீம் நம்மிடம் கூறுகையில்...
அல்ஹம்துலில்லாஹ் என மகன்கள் இமாம் ஷாபி பள்ளியில் பயின்று இந்த அளவுக்கு மார்க்குகள் பெற்று இருப்பதற்கு முதலில் வல்லா ரஹ்மானாகிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அடுத்து, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், மற்றும் உடன் பயின்ற அவர்களுடைய நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கே ஒரு சில விஷயங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
என பிள்ளைகள் இந்த அளவுக்கு மார்க் பெற முக்கிய காரணங்களில் சில:
1. தினசரி காலை தொழுகையை ஜமாத்துடன் நிறைவேற்றி, தொடர்ந்து மக்தப் மதரசா பாடங்களை படித்துவிட்டுதான், பள்ளி செல்ல ஆயத்தமாவார்கள்.
2. என் பிள்ளைகளுக்கு இன்றுவரை மொபைல், வாகனம் வாங்கி கொடுக்கவில்லை. (அவர்களின் சீரழிவிற்கு இதுதான் முழு முதல் காரணம் என்பதை உணர்ந்ததால்)
3. எங்கள் வீடுகளில் டிவி கிடையாது. அதனால் அவர்களுக்கு சினிமா, சீரியல் பற்றி தெரியாது. இதுவும் அவர்களின் ஒழுக்கம் கெடாமல் பாதுகாத்தது.
4. குரான் வாசிப்பதை அதிக ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருகின்றனர்.
5. இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.
6. நல்ல நண்பர்களுடன் மட்டும் தொடர்பு வைத்து இருந்தார்கள். அதை நாங்களும் கண்காணித்து வந்தோம்.
7. எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரியப்பெருமக்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.
மேற்கண்ட காரணங்களால் எனது மகன்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். என்றார்.
Alhamthulillah in sha Allah will continue +2 Also
ReplyDeleteமாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
ReplyDeleteMasha Allah........Congratulation
ReplyDeleteMasha allah
ReplyDeleteMasha Allah.......
ReplyDeleteமாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்..மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..
ReplyDeleteIraiva, Men melum ivarkaludaya arivai valarpanaka
ReplyDeleteIraiva, Men melum ivarkaludaya arivai valarpanaka
ReplyDeleteஎப்படி பிள்ளைகள் வளர்க்க வேண்டும் என்பதை கிடைத்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தி பலருக்கு சிந்தனையை தந்த நண்பர் முஹம்மது சலீம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல எண்ணம். நல்ல சிந்தனை. வல்லவன் வழியில் வாழ்வதே இலட்சியம். நேர்மை, உண்மை, நியாயம் இவைகள் கலந்த குணம் உம்மிடம் இருக்க உந்தன் வளர்ப்பு அப்படித்தானே இருக்கும். மிகுந்த மகிழ்ச்சி. இனியும் உங்கள் வாழ்வில் உன்னதம் பெற வாழ்த்துக்கள், துவாவுடன்.