.

Pages

Monday, May 16, 2016

அதிரையில் இரவில் 4-1/2 மணி நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி !

அதிராம்பட்டினம் மே-16
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவில் 4-1/2 மணி நேர மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானர்கள்.

அதிராம்பட்டிம மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மதுக்கூர் வாடியக்காடு 33 கே.வி.ஏ துணை மின் நிலையத்தின் மின் பாதை வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் மின் பாதையில் ஏற்பட்ட திடீர் பழுதால் சுமார் 4-1/2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மீண்டும் நள்ளிரவு 12  மணியளவில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இரவு நேர திடீர் மின்தடையால் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

1 comment:

  1. நேற்றிரவு 8 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது.
    9.45 வரை மின்சாரம் வரவில்லை.
    பக்கத்துவீட்டில் குடும்பத்தலைவர் தனது மகனைக் கூப்பிட்டு மின்சார வாரிய ஆபீசுக்கு போன் செய்து எத்தனை மணிக்கு மின்சாரம் வரும் என்று கேட்கச் சொன்னார்.
    அவர் மகனும் போன் செய்து எத்தனை மணிக்கு மின்சாரம் வரும் என்று கேட்டார்.
    ஆனால்
    அவர் கேட்டது மின்சார வாரியத்தின் இளநிலை பொறியாளரிடம் அல்ல.
    உள்ளூர் கட்சியின் நகரச் செயலாளரிடம்.

    ( முகநூல் பதிவு)

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.