.

Pages

Friday, May 13, 2016

அதிரையில் புதிதாக மஸ்ஜீத் தவ்பா பள்ளிவாசல் திறப்பு !

அதிராம்பட்டினம் மே-13
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட மஸ்ஜீத் தவ்பா பள்ளி வாசலில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை நடைபெற்றது. இதில் எம்.எஸ் செய்யது இப்ராஹீம் ஜும்மா உரை நிகழ்த்தினார். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. தொழுகையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன் பராமரிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  அதிராம்பட்டினம் கிளை-2 ஏற்றுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  அதிராம்பட்டினம் கிளை-2 மஸ்ஜீத் தவ்பா பள்ளிவாசல் நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது:
'இறைவனின் மாபெரும் கிருபையால் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இந்த பள்ளிவாசல் இன்று திறக்கப்பட்டுள்ளது. இன்றைய ஜும்மாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  இட நெருக்கடியால் பள்ளிவாசல் வெளிப்பகுதியிலும் தொழுகையாளிகள் அமர வைக்கப்பட்டனர்.

இதன் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. பணிகள் தொடர்ந்து நடந்திட தங்களால் இயன்ற அளவு நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும்' என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.
 

2 comments:

  1. Today onwards in CMP lane area there are two times athaan even ramalan month also ,so CMP lane people are will be confuse in future be careful.

    ReplyDelete
  2. ASSALAMU ALAIKKUM BROTHER GOOD
    Capture good innovation

    THANKYOU FOR ALLAH

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.