அதிராம்பட்டினம், ஜூலை 15
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தமாகாவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதையொட்டி இன்று காலை தமாகா அதிரை பேரூர் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு தாமாக அதிரை பேரூர் தலைவர் எம்.எம்எஸ் அப்துல் கரீம் தலைமை வகித்து தமாகா கொடியேற்றி வைத்தார். துணைத் தலைவர் கண்ணன் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமாகா தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் டி. ராஜா உள்ளிட்ட ஏராளமான தமாகாவினர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தமாகாவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதையொட்டி இன்று காலை தமாகா அதிரை பேரூர் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு தாமாக அதிரை பேரூர் தலைவர் எம்.எம்எஸ் அப்துல் கரீம் தலைமை வகித்து தமாகா கொடியேற்றி வைத்தார். துணைத் தலைவர் கண்ணன் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமாகா தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் டி. ராஜா உள்ளிட்ட ஏராளமான தமாகாவினர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.