.

Pages

Thursday, August 29, 2019

இலவச கண் அறுவை சிகிச்சை செய்த 103 பேருக்கு மருத்துவப் பரிசோதனை!

அதிராம்பட்டினம், ஆக. 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஜூலை 27 ந் தேதி நடைபெற்றது. இதில், 815 பேருக்கு சோதனை செய்ததில் 103 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறிந்து, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் IOL அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால், கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 103 பயனாளிகளுக்கு அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் இன்று (29-08-2019) வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. இதில், கண் பார்வைத்திறன், கருவிழியில் புண் ஏற்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும்,  கண்ணில் சொட்டு மருந்து போடும் முறைகள் பற்றி விளக்கப்பட்டன. பார்வைத்திறன் குறைபாடுகள் உள்ள பயனாளிகளுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல், செயலாளர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம். முகமது முகைதீன், சங்க இயக்குநர்கள் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், முன்னாள் தலைவர் என். ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.