சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரும் தன்னார்வத்துடன் ஈடுபட வேண்டும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பேரூராட்சியில் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் நிறைவு மற்றும் அரசு அனைத்துத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மேலும் அவர் பேசியது:
பொதுமக்கள் ஒவ்வொருவரும் தன்னார்வத்தோடு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தங்களது வீட்டிலேயே தனித்தனியாக பிரித்துக் கொடுத்தால் பேரூராட்சிப் பணியாளர்கள் அதை எளிதில் கையாள வசதியாக இருக்கும்.
பிளாஸ்டிக் கழிவினால் காசநோய், இதய நோய், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குவதால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் 139 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசுகையில், பல்வேறு சிறப்புகள் கொண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கும்பகோணம் நகராட்சியும், மதுக்கூர் பேரூராட்சியும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்மாதிரியான மாவட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் திகழ அனைவரும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சி. வி. சேகர், சார் ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை. திருஞானம், மதுக்கூர் ஒன்றிய கூட்டுறவு பால்வள சங்கத் தலைவர் துரை. செந்தில், மதுக்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், உதவிப் பொறியாளர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) வீரமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் மாதவன் வரவேற்றார். நிறைவாக, மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவடிவேல் நன்றி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பேரூராட்சியில் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் நிறைவு மற்றும் அரசு அனைத்துத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மேலும் அவர் பேசியது:
பொதுமக்கள் ஒவ்வொருவரும் தன்னார்வத்தோடு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தங்களது வீட்டிலேயே தனித்தனியாக பிரித்துக் கொடுத்தால் பேரூராட்சிப் பணியாளர்கள் அதை எளிதில் கையாள வசதியாக இருக்கும்.
பிளாஸ்டிக் கழிவினால் காசநோய், இதய நோய், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குவதால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் 139 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசுகையில், பல்வேறு சிறப்புகள் கொண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கும்பகோணம் நகராட்சியும், மதுக்கூர் பேரூராட்சியும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்மாதிரியான மாவட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் திகழ அனைவரும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சி. வி. சேகர், சார் ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை. திருஞானம், மதுக்கூர் ஒன்றிய கூட்டுறவு பால்வள சங்கத் தலைவர் துரை. செந்தில், மதுக்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், உதவிப் பொறியாளர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) வீரமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் மாதவன் வரவேற்றார். நிறைவாக, மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவடிவேல் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.