.

Pages

Monday, August 26, 2019

அரிமா சங்கம் சார்பில் அதிரையில் மரக்கன்றுகள் நடும் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.26
பசுமையை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று (26-08-2019) திங்கட்கிழமை காலை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம். நிஜாமுதீன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை, அரிமா சங்க மாவட்ட பசுமை புரட்சி (Green Revolution) தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் தொடங்கி வைத்தார்.

அன்னை தெரசா தினத்தை முன்னிட்டு, பசுமையை வலியுறுத்தி அதிராம்பட்டினம் பிரதான சாலையோரங்களில் வேங்கை, புங்கை, மஹாகனி, வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளை பாதுகாக்க கூண்டுகள் வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, எம்.அகமது, எம். அப்துல் ரஹ்மான், குப்பாசா அகமது கபீர், முகமது அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.