.

Pages

Thursday, August 15, 2019

அதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதிராம்பட்டினம் பேரூர்  காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.கார்த்திகேயன் சேர்மன்வாடி அருகே உள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் செயலாளர் அதிரை பாருக், நாராயண சாமி, பி.திலகராஜ் கட்டபொம்மன், ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.