அதிராம்பட்டினம், ஆக.09
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில், இன்று (ஆக.09) வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பின் பேரில், மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்டபம் ஜெய்னுல் ஆபிதீன், தமுமுக மாநில துணைச்செயலாளர் அதிரை அகமது ஹாஜா, நாம் தமிழர் கட்சி மாவட்ட பொருளாளர் ஏ.ஜெ ஜியாவுதின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, அக்கட்சியினர், தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டவாறு பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மஜக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் பைசல் அகமது, மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒரத்தநாடு பஷீர் அகமது, குவைத் மண்டல IKP துணைச்செயலாளர் ராஜா, அதிரை பேரூர் செயலாளர் அப்துல் சமது, மல்லிப்பட்டினம் நகர செயலாளர் அப்துர் ரஹ்மான், பட்டுக்கோட்டை பொறுப்பாளர் ரியாஸ் அகமது, முகமது பஹத், புதுகை கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் அபுதாஹிர், தமுமுக மாவட்ட செயலாளர் சேக், எஸ்டிபிஐ நகர செயலாளர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில், இன்று (ஆக.09) வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பின் பேரில், மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்டபம் ஜெய்னுல் ஆபிதீன், தமுமுக மாநில துணைச்செயலாளர் அதிரை அகமது ஹாஜா, நாம் தமிழர் கட்சி மாவட்ட பொருளாளர் ஏ.ஜெ ஜியாவுதின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, அக்கட்சியினர், தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டவாறு பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மஜக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் பைசல் அகமது, மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒரத்தநாடு பஷீர் அகமது, குவைத் மண்டல IKP துணைச்செயலாளர் ராஜா, அதிரை பேரூர் செயலாளர் அப்துல் சமது, மல்லிப்பட்டினம் நகர செயலாளர் அப்துர் ரஹ்மான், பட்டுக்கோட்டை பொறுப்பாளர் ரியாஸ் அகமது, முகமது பஹத், புதுகை கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் அபுதாஹிர், தமுமுக மாவட்ட செயலாளர் சேக், எஸ்டிபிஐ நகர செயலாளர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.