.

Pages

Saturday, August 31, 2019

அதிராம்பட்டினம் ஆற்று நீர் வழித்தட பகுதிகளில் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 30
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற ஆற்று நீர் வழித்தட வாய்க்கால் பகுதிகளில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., இன்று வெள்ளிக்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம் பேரூர் பகுதியின் குடிநீர் தேவைக்காக, அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அவ்வமைப்பினர் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக, கல்லணையிலிருந்து கடந்த (17-08-2019) அன்று தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து நேற்று வியாழக்கிழமை முதல் இராஜமடம் கிளை வாய்க்காலில் தண்ணீர் மிதமாக வந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தொக்காலிகாடு கிராமத்தில் உள்ள இராஜமடம் கிளை
வாய்க்கால் 20/21 ல், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அங்கு திரண்டிருந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., யிடம் கேட்டுக்கொண்டனர்.

பின்னர், அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லும் சி.எம்.பி வாய்க்கால் பகுதியை பார்வையிட்டார். சி.எம்.பி வாய்க்கால் இணைப்பில் இருந்து பெண்கள் குளத்திற்கு (மரைக்கா குளம்) தண்ணீர் செல்லும் 100 மீட்டர் தூரத்தில் வடிகால் அமைக்கும் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, திமுக பட்டுக்கோட்டை (மேற்கு) ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன், திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், மாளியாக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ், மகிழங்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்புமாறன், தொக்காலிகாடு கிராம நீர்நிலை ஆர்வலர்கள் சாமிநாதன், பாண்டியன் மற்றும் அதிராம்பட்டினம் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் பலர் உடன் இருந்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.