தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார்.
விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ. அம்சத் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் எம். முகமது முகைதீன், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.பி கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரி விலங்கியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் செய்யது முகமது ஷா, ஹபீப் முகமது, நசீர் அகமது, அமானுல்லா ஹமீது, குமாரசாமி, ரவீந்திரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும், கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஆசைமணி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) சூரத்குமார், அஷிர் ரமேஷ், வழக்குரைஞர் தர்மராஜன், என்.உதயகுமார், மணிகண்டன், மயில்வாகனன், பேராசிரியர் வீரப்பன், சிவகுமார், பேராசிரியர் செழியன், வீரபாண்டியன், பேராசிரியர் கவிதா, ஆசிரியை கார்த்திகை செல்வி, பேராசிரியர் சுப்பிரமணி, ராமநாதன், வழக்குரைஞர் வீரபத்திரன், ராஜா தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
விழாவில், கடந்த காலங்களில் கல்லூரி விலங்கியல் துறையில் ஆற்றிய சாதனைகள், துறைப் பற்றிய முக்கியத் தகவல்கள் அடங்கிய 'விழா மலர்' வெளியிடப்பட்டன. முதல் பிரதியை கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் வெளியிட்டார். கல்லூரி முன்னாள் மாணவர் பேராசிரியர் செய்யது முகமது ஷா பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியினை, கல்லூரிப் பேராசிரியை கானப்பிரியா தொகுத்து வழங்கினார். முடிவில், விலங்கியல் துறை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முத்துக்குமாரவேல் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பேராசிரியர்கள் ஓ.சாதிக், மகாராஜன், சுகுமாரன், வசந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், 300 க்கும் மேற்பட்ட கல்லூரி விலங்கியல் துறை முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசைபோட்டனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்த வேண்டுமென, கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒருமித்த கருத்தாகவும், விருப்பமாகவும் இருந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.