.

Pages

Friday, August 9, 2019

'அச்சமற்ற வாழ்வே, கண்ணியமான வாழ்வு': அதிரையில் PFI கருத்தரங்கம்!

அதிராம்பட்டினம், ஆக. 09
கடந்த ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 31 வரை, 'அச்சமற்ற வாழ்வே, கண்ணியமான வாழ்வு' என்ற முழக்கத்துடன் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினத்தில் கருத்தரங்க நிகழ்ச்சி இன்று (ஆக.09) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் தலைவர் என். முகமது புஹாரி தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில செயலாளர் வழக்குரைஞர் ஷஃபியா, எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் இசட். முகமது இலியாஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சேக் அஜ்மல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.அபூபக்கர் சித்திக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

முன்னதாக, அவ்வமைப்பின் நகர செயற்குழு உறுப்பினர் எம்.அகமது சலீம் வரவேற்றுப் பேசினார். முடிவில், அவ்வமைப்பின் நகர செயற்குழு உறுப்பினர் எஸ்.முகமது ஜாவித் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.