அதிரை நியூஸ்: ஆக.11
நபி (ஸல்) அவர்களின் ஹதீஸின்படி, ஹஜ் என்பது அரபா மலையில் (ஜபல் அல் ரஹ்மா எனவும் அழைக்கப்படுகின்றது) குழுமுவது தான், யார் அரபாவில் நிற்பதை தவறவிடுகின்றாரோ அவருக்கு ஹஜ் இல்லை (ஹதீஸ் கருத்து) என்பதன் அடிப்படையில் நேற்று காலையிலிருந்து மாலை வரை அரபா பெருவெளியில் குழுமியிருந்தனர்.
ரசூல் ஸல் அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின் இறுதிப்பேருரையை இங்கு தான் நிகழ்த்தினார்கள். 110,000 சதுர அடியில் பள்ளியுடனும் 80,000 சதுர அடி வராண்டாவுடனும் அமைந்துள்ள நமீரா மஸ்ஜிதில் (Namirah Masjid) நேற்று சனிக்கிழமை அரபாவில் கூடியிருந்த ஹாஜிகளுக்கு மத்தியில் இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கை, இஸ்லாம் கூறும் பொறுமை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் போன்றவற்றை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
நாள் முழுவதும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதில் ஈடுபட்டிருந்த ஹாஜிகள் சூரிய அஸ்தமனத்திற்கு பின் முஜ்தலீபாவை நோக்கி நடந்தனர். அங்கு மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை சேர்த்தும் சுருக்கியும் நிறைவேற்றிய ஹாஜிகள் நள்ளிரவுக்குப் பின் மினாவில் உள்ள ஜமாரத் எனப்படும் ஷைத்தானுக்கு கல்லெறியும் அடையாள நிகழ்த்திய பின் ஹரம் ஷரீஃபில் தவாபை நிறைவேற்றச் சென்றனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
நபி (ஸல்) அவர்களின் ஹதீஸின்படி, ஹஜ் என்பது அரபா மலையில் (ஜபல் அல் ரஹ்மா எனவும் அழைக்கப்படுகின்றது) குழுமுவது தான், யார் அரபாவில் நிற்பதை தவறவிடுகின்றாரோ அவருக்கு ஹஜ் இல்லை (ஹதீஸ் கருத்து) என்பதன் அடிப்படையில் நேற்று காலையிலிருந்து மாலை வரை அரபா பெருவெளியில் குழுமியிருந்தனர்.
ரசூல் ஸல் அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின் இறுதிப்பேருரையை இங்கு தான் நிகழ்த்தினார்கள். 110,000 சதுர அடியில் பள்ளியுடனும் 80,000 சதுர அடி வராண்டாவுடனும் அமைந்துள்ள நமீரா மஸ்ஜிதில் (Namirah Masjid) நேற்று சனிக்கிழமை அரபாவில் கூடியிருந்த ஹாஜிகளுக்கு மத்தியில் இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கை, இஸ்லாம் கூறும் பொறுமை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் போன்றவற்றை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
நாள் முழுவதும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதில் ஈடுபட்டிருந்த ஹாஜிகள் சூரிய அஸ்தமனத்திற்கு பின் முஜ்தலீபாவை நோக்கி நடந்தனர். அங்கு மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை சேர்த்தும் சுருக்கியும் நிறைவேற்றிய ஹாஜிகள் நள்ளிரவுக்குப் பின் மினாவில் உள்ள ஜமாரத் எனப்படும் ஷைத்தானுக்கு கல்லெறியும் அடையாள நிகழ்த்திய பின் ஹரம் ஷரீஃபில் தவாபை நிறைவேற்றச் சென்றனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.