.

Pages

Friday, August 16, 2019

2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் கடமையை நிறைவு செய்தனர் (முழு விபரம்)

அதிரை நியூஸ்: ஆக.16
இந்த வருடம் 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றியதாக இந்திய தூதர் டாக்டர். அவுசீப் சயீத், துணைத்தூதர் முஹமது நூர் ரஹ்மான் ஷேக் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். அப்போது இந்தியாவிலிருந்து ஹஜ் நல்லெண்ண பிரதானிகள் குழுவின் தலைவர் ஆற்காடு இளவரசர் நவாப் முஹமது அப்துல் அலி, துணைத்தலைவர் சையத் கைருல் ஹசன் ரிஜ்வி (சேர்மன், தேசிய சிறுபான்மை கமிஷன்), ஹஜ்ஜுக்கான சிறப்பு கான்சுலர் ஒய். சபீர் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்திய ஹஜ் கமிட்டி மூலம் 140,000 + இந்திய தனியார் ஹஜ் ஆபரேட்டர்கள் மூலம் 60,000 என மொத்தம் 2 லட்சம் பேர் ஹஜ் செய்துள்ளனர்.

101 வயது அத்தர் பீபி உட்பட 45 பேர் 90 வயதுக்கு மேற்பட்ட முதிய ஹஜ் பயணிகளாவர்.

மினா, முஜ்தலீபா, அரபா ஆகிய புனிதத் தலங்களில் 11 இந்தியர்கள் மரணமடைந்துள்ளனர், இதுவே கடந்த வருட மரணம் 12 ஆக இருந்தது.

மொத்தம் இந்தியர்களின் மரண எண்ணிக்கை ஆகஸ்ட் 12 வரை 52 பேர், ஹஜ் கமிட்டி மூலம் வந்தவர்கள் 44 + தனியார் மூலம் வந்தவர்கள் 8 பேர், இதுவே கடந்த ஆண்டு 73 ஆக இருந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் 1,258. இந்தியன் ஹஜ் மிஷன் மருத்துவமனைகளில் 893 பேரும் சவுதி மருத்துவமனைகளில் 365 பேரும் சிகிச்சை பெற்றனர்.

கடந்த வருடம் 10 குழந்தை பிறப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த வருடம் 2 குழந்தைகள் மட்டுமே பிறந்தன. (ஹஜ் கமிட்டி மூலம் வந்தவர்கள் மட்டும்).

55 நோயாளிகள், உடல் தளர்ந்த முதியவர்கள் ஆம்புலன்ஸ் சேவை மூலம் அரபா அழைத்துச் செல்லப்பட்டனர். அரபா. மினாவில் பெய்த மழைகள் ஹாஜிகளுக்கு இதமான தருணமாக அமைந்தது.

துல்ஹஜ் 10 ஆம் நாளான பெருநாள் அன்று பகல் 2 மணிக்குள் முன்பதிவு செய்யப்பட்ட 71,846 உழுஹிய்யா பிராணிகளும் அறுக்கப்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இந்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் சார்பாக 37 பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட 160 மருத்துவர்களும், 35 சிறப்பு மருத்துவர்களும், 181 மருத்துவ ஊழியர்களும் சேவை வழங்கியதுடன் ரூபாய் 3.5 கோடி (சுமார் 90,560 டாலர்) மதிப்புள்ள சிறப்பு மருத்துவ உபகரணங்களையும் கொண்டு வந்திருந்தனர்.

நோயாளிகள், தள்ளாத வயதினர்களின் சிறிய உடல்நல குறைவுகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுவினர் அவர்கள் தங்கியிருந்த இருப்பிடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்தனர்.

மக்கா, மதினா ஆகிய நகரங்களில் 2 தலைமை அலுவலகங்கள் அமைக்கப்பட்டு அதன் கீழ் 620 பேர் நிர்வாகம் மற்றும் மருத்துவ அதிகாரிகளாக பணியாற்றினர்.

இந்தியாவின் 21 விமான நிலையங்களில் இருந்து 507 விமான சேவைகள் மூலம் மதினா மற்றும் ஜித்தா விமான நிலையங்களுக்கு ஹஜ் பயணிகள் வந்தடந்தனர். இந்த சேவைகளை சவுதி ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவை மேற்கொண்டன. தனியார் சேவைகளில் வந்தவர்கள் பெரும்பாலும் ஜித்தா விமான நிலையத்திற்கு பொதுவான பயணிகள் விமானம் மூலம் வந்திறங்கினர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.