அதிராம்பட்டினம், ஆக.15
துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆகியோருக்கு கடற்கரைத் தெரு ஜமாத் நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவரது மகன் வஜீர் அலி (வயது 45). ரைபிள் கிளப் உறுப்பினரான இவர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார்.
அண்மையில், கோவை மாநகரக் காவல் துறை மற்றும் ரைபிள் கிளப் இணைந்து, நடத்திய 45-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் அதிராம்பட்டினம் வீரர் வஜீர் அலி (வயது 45) 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆகிய பிரிவுகளிலும், அவரது சகோதரர் தைஷீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் கலந்துகொண்டு விளையாடி சாதனை நிகழ்த்தினர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஜமாத் நிர்வாகக் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சாதனை வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆகியோருக்கு ஜமாத் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.
கடற்கரைத் தெரு ஜமாத் தலைவர் அப்துல் ரெஜாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கடற்கரைத் தெரு ஜமாத் நிர்வாகிகள், இளைஞர்கள் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆகியோருக்கு கடற்கரைத் தெரு ஜமாத் நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவரது மகன் வஜீர் அலி (வயது 45). ரைபிள் கிளப் உறுப்பினரான இவர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார்.
அண்மையில், கோவை மாநகரக் காவல் துறை மற்றும் ரைபிள் கிளப் இணைந்து, நடத்திய 45-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் அதிராம்பட்டினம் வீரர் வஜீர் அலி (வயது 45) 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆகிய பிரிவுகளிலும், அவரது சகோதரர் தைஷீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் கலந்துகொண்டு விளையாடி சாதனை நிகழ்த்தினர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஜமாத் நிர்வாகக் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சாதனை வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆகியோருக்கு ஜமாத் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.
கடற்கரைத் தெரு ஜமாத் தலைவர் அப்துல் ரெஜாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கடற்கரைத் தெரு ஜமாத் நிர்வாகிகள், இளைஞர்கள் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.