.

Pages

Saturday, August 31, 2019

காரைக்குடி ~ திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு ரயில் இயக்க எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., யிடம் கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஆக.30
காரைக்குடி ~ திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., யிடம் அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அமைப்பினர் இன்று வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற ஆற்று நீர் வழித்தட வாய்க்கால் பகுதிகளை பார்வையிடுவதற்கு இன்று வருகை தந்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., யிடம், அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவையின் நிறுவனத் தலைவர் மு.க.செ அகமது அலி ஜாஃபர் கோரிக்கை மனு அளித்தார். அதில், காரைக்குடி ~ திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு ரயில் போக்குவரத்தை உடனடியாக இயக்கவும்,  காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் காலியாக உள்ள கேட் கீப்பர் பணியிடங்களை நிரப்பக் கோரியும் குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்டு, எதிர்வரும் (03-09-2019) அன்று தெற்கு ரயில்வே திருச்சி மண்டல வர்த்தக மேலாளரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், கோரிக்கை பற்றி எடுத்துக்கூறி, அதன் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் தாம் வலியுறுத்த உள்ளதாக அவர்களிடம் தெரிவித்தார்.

அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், அதிரை அரிமா சங்க நிர்வாகிகள் பேராசிரியர் எம்.ஏ. முகமது அப்துல் காதர், எஸ்.எம். முகமது முகைதீன், எம். அப்துல் ஜலீல், ரோட்டரி சங்க நிர்வாகிகள் டி. முகமது நவாஸ்கான், இசட். அகமது மன்சூர், திமுகவை சேர்ந்த கோடி முதலி, முல்லை ஆர்.மதி, இன்பநாதன், எம். பகுருதீன், ஏ.எம்.ஒய். அன்சர்கான், நாகராஜ், எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான்,  இ.வாப்பு மரைக்காயர், என்.கே.எஸ் முகமது சரீப், எஸ்.கார்த்திகேயன் (காங்கிரஸ்), ஏ.சாகுல் ஹமீது  (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), என்.காளிதாஸ் (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இக்கோரிக்கையை ரயில்வே உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அமைச்சர் உள்ளிடோர் கவனத்துக்கு எடுத்துச்செல்லுமாறு வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.