அதிராம்பட்டினம், ஆக.07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் ~ உறுப்பினர்கள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 29) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் , நிர்வாக அலுவலர் எம். நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் மற்றும் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்துகொண்ட அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள் முகமது இம்தியாஸ், ஹாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் 15ந் தேதி இந்திய 73-வது சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றி வைத்து, அரசு தொடக்கபள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்வது என்றும், எதிர்வரும் (26-08-2019) அன்று தஞ்சை கேன்சர் சென்டர், அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து புற்றுநோய் கண்டறிதல் முகாம் ஒன்றை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், கடந்த ஜூலை மாதம் ஷிஃபா மருத்துவமனையில் நடத்திய கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் வெற்றிகரமாக நடத்திட தேவையான உதவிகளை வழங்கிய அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், ஷிஃபா மருத்துவமனை சார்பில், களப்பணியாற்றிய தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் வரவேற்றுப் பேசினார். செயலாளர் சேக்கனா எம். நிஜாமுதீன் மாதாந்திர அறிக்கை வாசித்தார். பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் சங்க நிதிநிலை அறிக்கை வாசித்தார். முடிவில், சங்க நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது நன்றி கூறினார்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பேராசிரியர் முருகானந்தம், ஆர். செல்வராஜ், எம்.அகமது, என். ஆறுமுகச்சாமி, எம்.சாகுல் ஹமீது, அரிமா சங்க நிர்வாகிகள் எம். அப்துல் ரஹ்மான், எம். முகமது அபூபக்கர், என். உதயகுமார், முல்லை மதி, ஏ.கண்ணன், நெய்னா முகமது, அபுல் ஹசன் சாதலி, எம்.கே.எம் அபூபக்கர், வரிசை முகமது, அகமது ஜுபைர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் ~ உறுப்பினர்கள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 29) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் , நிர்வாக அலுவலர் எம். நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் மற்றும் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்துகொண்ட அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள் முகமது இம்தியாஸ், ஹாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் 15ந் தேதி இந்திய 73-வது சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றி வைத்து, அரசு தொடக்கபள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்வது என்றும், எதிர்வரும் (26-08-2019) அன்று தஞ்சை கேன்சர் சென்டர், அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து புற்றுநோய் கண்டறிதல் முகாம் ஒன்றை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், கடந்த ஜூலை மாதம் ஷிஃபா மருத்துவமனையில் நடத்திய கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் வெற்றிகரமாக நடத்திட தேவையான உதவிகளை வழங்கிய அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், ஷிஃபா மருத்துவமனை சார்பில், களப்பணியாற்றிய தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் வரவேற்றுப் பேசினார். செயலாளர் சேக்கனா எம். நிஜாமுதீன் மாதாந்திர அறிக்கை வாசித்தார். பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் சங்க நிதிநிலை அறிக்கை வாசித்தார். முடிவில், சங்க நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது நன்றி கூறினார்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பேராசிரியர் முருகானந்தம், ஆர். செல்வராஜ், எம்.அகமது, என். ஆறுமுகச்சாமி, எம்.சாகுல் ஹமீது, அரிமா சங்க நிர்வாகிகள் எம். அப்துல் ரஹ்மான், எம். முகமது அபூபக்கர், என். உதயகுமார், முல்லை மதி, ஏ.கண்ணன், நெய்னா முகமது, அபுல் ஹசன் சாதலி, எம்.கே.எம் அபூபக்கர், வரிசை முகமது, அகமது ஜுபைர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.