பட்டுக்கோட்டை, ஆக.09
பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வாங்க தகுதி உள்ளவர்களின் முன்னுரிமைப் பட்டியலை வழங்க வேண்டும்.
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாக உதவித்தொகை பெறுவதற்காக அலைந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அவருக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட 2 கோரிக்கைகளையும் நிறைவேற்ற அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரசுத் துறைகளில் பணி புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி கழிப்பறை வசதி செய்ய வேண்டும் என சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலக அலுவலர்கள், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது, துணைத் தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ராவுத்தர், பேராவூரணி ஒன்றியத் தலைவர் வின்சன் ஜெயராஜ், செயலாளர் சுதாகரன், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ஜலீல் முஹைதீன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வாங்க தகுதி உள்ளவர்களின் முன்னுரிமைப் பட்டியலை வழங்க வேண்டும்.
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாக உதவித்தொகை பெறுவதற்காக அலைந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அவருக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட 2 கோரிக்கைகளையும் நிறைவேற்ற அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரசுத் துறைகளில் பணி புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி கழிப்பறை வசதி செய்ய வேண்டும் என சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலக அலுவலர்கள், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது, துணைத் தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ராவுத்தர், பேராவூரணி ஒன்றியத் தலைவர் வின்சன் ஜெயராஜ், செயலாளர் சுதாகரன், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ஜலீல் முஹைதீன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.