அதிரை நியூஸ்: ஆக. 14
நியூஸிலாந்து போலீஸ் துறை பெண் தலைவர் ஹஜ் கடமையை நிறைவு செய்தார்
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நியூஸிலாந்து நாட்டு சம்பவம் தீவிரவாதம் எந்த ஒரு மதத்தின் தனியுடமையல்ல என்பதை முழுவுலகிற்கும் எடுத்துச் சொல்லியது.
இந்த வருட ஹஜ்ஜிற்கு மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் தீவிரவாத்தால் சொந்தங்களை இழந்த நியூஸிலாந்து முஸ்லீம்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடன் சிறப்பு அழைப்பாளராக நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியின் போலீஸ் துறை இயக்குனர் (Director of Auckland Police) நைலா ஹஸன் என்ற பெண்மணியும் ஹஜ் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தார்.
தனது ஹஜ் கடமைகளை இனிதே நிறைவு செய்த நைலா ஹஸன் அவர்கள் சவுதியின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சர் அப்துல் லத்தீப் அல் ஷேக் அவர்களை மினா அல் கைப் மஸ்ஜித் வளாகத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த அமைச்சகமே மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தை மன்னரின் சார்பாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
நியூஸிலாந்து போலீஸ் துறை பெண் தலைவர் ஹஜ் கடமையை நிறைவு செய்தார்
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நியூஸிலாந்து நாட்டு சம்பவம் தீவிரவாதம் எந்த ஒரு மதத்தின் தனியுடமையல்ல என்பதை முழுவுலகிற்கும் எடுத்துச் சொல்லியது.
இந்த வருட ஹஜ்ஜிற்கு மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் தீவிரவாத்தால் சொந்தங்களை இழந்த நியூஸிலாந்து முஸ்லீம்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடன் சிறப்பு அழைப்பாளராக நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியின் போலீஸ் துறை இயக்குனர் (Director of Auckland Police) நைலா ஹஸன் என்ற பெண்மணியும் ஹஜ் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தார்.
தனது ஹஜ் கடமைகளை இனிதே நிறைவு செய்த நைலா ஹஸன் அவர்கள் சவுதியின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சர் அப்துல் லத்தீப் அல் ஷேக் அவர்களை மினா அல் கைப் மஸ்ஜித் வளாகத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த அமைச்சகமே மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தை மன்னரின் சார்பாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.